என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வல்லவாரி கிராமத்தை சேர்ந்தவர் தவச்செல்வன் வயது 50. இவர் சம்பவத்தன்று சொந்த வேலையாக தனது மோட்டார் சைக்கிளில் குளமங்கலம் தெற்கு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக  அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அனுமதிக்கப்பட்ட தவச்செல்வன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×