search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    வீட்டில் குட்கா பதுக்கிய அண்ணன் தம்பி கைது

    வீட்டில் குட்கா பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப் பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக் கும் வகையில் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடைபெற்று வரும் வகையில்,  பெரம்பலூர் மாவட்ட எஸ்,பி.மணி தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் தடுப்பு குறித்து சிறப்பு சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று பெரம்பலூர் சப்&இன்ஸ் பெக்டர் செல்வராஜ், போலீசாருடன் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு சோதனை செய்தார்.

    அப்போது கிடைத்த ரகசிய தகவலின் படி பெரம்பலூர் மேரிபுரம் சண்முகம் என்பவரது வீட்டின் முன்பு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை (குட்கா) வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலம் ஜோலூர் மாவட்டம் சுரணா கிராமத் தைச் சேர்ந்தவர்களும் தற்போது பெரம்பலூர் பள்ளி வாசல் தெருவில் வசித்து வருபவர்கள் நப்ப ராம் (வயது 32) அவரது தம்பி விக்ரம்குமார் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் வைத்திருந்த சுமார் ரூ.71,280 மதிப்புள்ள 564 பாக்கெட் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட இருவரையும் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளார். 
    Next Story
    ×