என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
அனைத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு:
வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 2 நாள் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.
இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் தங்கமுத்து தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் உள்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதேபோல் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராக்கி முத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜய மனோகரன் உள்பட ஏராளமான வருவாய்த் துறை அலுவலர்கள் ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றனர்.
வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு காரணமாக தாலுகா அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு போன்ற பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெறவில்லை.
Next Story






