என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அந்தியூர் போலீஸ் நிலையத்தில் கோவை மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.
    X
    அந்தியூர் போலீஸ் நிலையத்தில் கோவை மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    அந்தியூர் போலீஸ் நிலையம் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு

    ஈரோடு மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட அந்தியூர் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட அந்தியூர் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சிறந்த போலீஸ் நிலையங்களை தேர்ந்தெடுத்து தமிழக முதல்&அமைச்சரின் சிறந்த போலீஸ் நிலையத்திற்கான முதல் 3 பரிசினை வழங்கி வருகிறது.

    அதன்படி இந்த வருடம் சிறந்த போலீஸ் நிலைய ங்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு 20 போலீஸ் நிலையங்களின் பட்டியலில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் போலீஸ் நிலையம் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. 
    இதையொட்டி அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு கோவை மண்டல டி.ஐ.ஜி. முத்துசாமி நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார். 

    போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை காவலர்கள் அணுக வேண் டிய முறை பற்றியும்,  போலீஸ் நிலையத்தில் பராமரி க்கப்படும் பதிவேடுகளை கையாளுவது குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அமரும் இருக்கை, குடிநீர் வசதி செய்து கொடுத்தல் பற்றியும் விசாரித்தார்.  

    வரவேற்புப்பதிவேடு பராமரித்தல், போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    மேலும் காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதத்தில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதையும், இன்ஸ்பெக்டர் மற்றும் அனைத்து போலீசாருக்கும் அவர் வலியுறுத்தினார். சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டதற்காக இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களுக்கு அவர் பாராட்டை தெரிவித்துக் கொண்டார்.

    போலீசாரின் குறைகளைக் கேட்டறிந்தும், சுற்றுப்புறத்தை தூய்மை யாக வைத்திருப்பதன் அவசியத்தை எடுத்து கூறினார். இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயன், அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×