என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
நம்பியூர் அருகே குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நம்பியூர்:
நம்பியூர் அருகே குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நம்பியூர் அருகே உள்ள மலையம்பாளையம் பகுதியை சேர்ந்த மயிலாள் (45). அதே பகுதியில் விவசாயக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார்.
மயிலாள் மகள் நந்தினியை கோவை மாவட்டம் கவுண்டன் புதூரை சேர்ந்த முருகன் என்பவருக்கு கடந்த 8 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு அதிஸ், அட்ஷயன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் முருகன் அடிக்கடி மது குடித்துவிட்டு சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு நந்தினி கடந்த ஒரு வருடமாக மலையம்பாளையத்தில் உள்ள தாயின் வீட்டில் மகன்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முருகன் சமாதானம் பேசி ஊருக்கு அழைத்து சென்று ள்ளார். பின்னர் தனது தாயின் ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்காக நந்தினி மற்றும் முருகன், மகன்களுடன் வந்துள்ளார்.
சம்பவத்தன்று நந்தினி தனது மகன்களுடன் மலையம்பாளையம் சென்று வருவதாக கூறிச்சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. எனவே எனது மகளை கண்டுபிடித்து தருமாறு மயிலாள் வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினி மற்றும் அவரது மகன்களை தேடி வருகின்றனர்
Next Story






