என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுக்குழு கூட்டத்தில் மாநில துணை தலைவர் தென்னரசு பேசினார்.
அகல ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி வரையிலான அகல ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வேதாரண்யம் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் தலைவரும், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவருமான தென்னரசு தலைமையில் நடந்தது. செயலாளர் சுபஹானி வரவேற்றார். பொருளாளர் சீனிவாசன் அறிக்கை வாசித்தார்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாகை மாவட்டத் தலைவர் வேதநாயகம், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், சுப்பிரமணியன், சாமிசெட்டி, உதயகுமார், கனகசுந்தரம், விஜயதிவாகர், சிவஞானம், ரஹ்மத்துல்லா, புயல்குமார், குமரசாமி, காதா¢முகைதீன், சுப்பராமன், நவாஸ்தீன், வசந்தி செல்வகுமார், மங்களதாஸ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
2022-24 ஆகிய 3 ஆண்டுகளுக்குரிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யபட்டனர். புதிய தலைவராக தென்னரசு, செயலாளராக சுபாஹானி, பொருளாளராக சீனிவாசன், துணைத் தலைவர்களாக சுப்பிரமணியன், ஆறுமுகம், துணைச் செயலாளர்களாக தங்கத்துரை, தமிழழகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை உறுப்பினர்கள் பாராட்டினர்.
கூட்டத்தில் அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை அகல ரெயில் பாதை பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஒன்றிய அரசை கேட்டுக் கொள்வது.
திருத்துறைப்பூண்டி சாலை வெட்டு குளம் காரியாபட்டினம் சாலை அரியாண்டிகுளம் ஆகியவற்றை தூர்வாரி சுத்தம் செய்து குளக்கரை சுவர், விளக்குகள் அமைக்க வேண்டும். நகருக்குள் வரும் லாரிகள் பொதுமக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையூறாக முக்கிய வீதிகளில் நிறுத்தி வைக்காமல் நகருக்கு வெளியே லாரிகள் நிறுத்தும் இடம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேதாரண்யம் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் தலைவரும், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவருமான தென்னரசு தலைமையில் நடந்தது. செயலாளர் சுபஹானி வரவேற்றார். பொருளாளர் சீனிவாசன் அறிக்கை வாசித்தார்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாகை மாவட்டத் தலைவர் வேதநாயகம், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், சுப்பிரமணியன், சாமிசெட்டி, உதயகுமார், கனகசுந்தரம், விஜயதிவாகர், சிவஞானம், ரஹ்மத்துல்லா, புயல்குமார், குமரசாமி, காதா¢முகைதீன், சுப்பராமன், நவாஸ்தீன், வசந்தி செல்வகுமார், மங்களதாஸ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
2022-24 ஆகிய 3 ஆண்டுகளுக்குரிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யபட்டனர். புதிய தலைவராக தென்னரசு, செயலாளராக சுபாஹானி, பொருளாளராக சீனிவாசன், துணைத் தலைவர்களாக சுப்பிரமணியன், ஆறுமுகம், துணைச் செயலாளர்களாக தங்கத்துரை, தமிழழகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை உறுப்பினர்கள் பாராட்டினர்.
கூட்டத்தில் அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை அகல ரெயில் பாதை பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஒன்றிய அரசை கேட்டுக் கொள்வது.
திருத்துறைப்பூண்டி சாலை வெட்டு குளம் காரியாபட்டினம் சாலை அரியாண்டிகுளம் ஆகியவற்றை தூர்வாரி சுத்தம் செய்து குளக்கரை சுவர், விளக்குகள் அமைக்க வேண்டும். நகருக்குள் வரும் லாரிகள் பொதுமக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையூறாக முக்கிய வீதிகளில் நிறுத்தி வைக்காமல் நகருக்கு வெளியே லாரிகள் நிறுத்தும் இடம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story






