என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சாலை விபத்தில் இளம்பெண் பலி

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் சாலை விபத்தில் பெண் பலியானார்.
    சூளகிரி, 
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த வர் ரவி (வயது 35). இவரது மனைவி ரத்தினா மற்றும் தம்பி ராஜ் (30) மனைவி சாரதா (28).

    இந்த நிலையில் இவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அணையை சுற்றிபார்க்க காரில் வந்தனர். காரை ரவி ஓட்டினார். அப்போது  - சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி எதிரே உள்ள மேம்பாலம் மேல் பகுதி சாலையில் கார் வந்தபோது பின்னால் அரசு பஸ் கார்மீது மோதியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை கரையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் சாரதா படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். 

    இந்த விபத்து குறித்து சூளகிரி போளீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×