என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 317 ஹெக்டேர் நிலங்கள் மீட்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 317 ஹெக்டேர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் நீர்தேக்கம் மற்றும் நீர்வரீ பாதைகளில் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளன. இதனால் மழைநீரை முழுமையாக தேக்கி வைத்து கோடை காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவில் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து அதனை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மாவட்ட வாரியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புதுறையினர் ஆய்வு நடத்தினர்.
அதில் 1,426 ஹெக்டேர் அளவுக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 25.39 ஹெக்டேர் இடம் மீட்கப்பட்டுள்ளது.
கலசப்பாக்கம், செங்கம், சேத்துப்பட்டு, செய்யாறு, வந்தவாசி, போளூர், வெம்பாக்கம் ஆகிய 7 வட்டங்களில் 97 தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 10 நீர்நிலைகள், ஒரு மேய்கால் நிலப்பரப்பு, ஒரு கிராம நத்தம், ஒருசாலை என அரசுக்கு சொந்தமான 13 இடங்கள் மீட்கப்பட்டன.
இதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த இடங்களும் மீட்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 292 ஹெக்டேர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 317.44 ஹெக்டேர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:&
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 317.44 ஹெக்டேர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு மீட்கும் பணி தொடர்கிறது. நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இல்லையெனில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி அனைத்து ஆக்கிரமிப்புகளும் விரைவில் அகற்றப்படும் என தெரிவித்துள்ளார்.வலர் உட்பட 3 பேர் காயம் அரக்கோணம் அருகே சலசலப்பு
Next Story






