என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இரும்பு கம்பியால் பெண் மீது தாக்குதல்

    முன்விரோதத்தில் இரும்பு கம்பியால் பெண்ணை தாக்கி வீடு சூறையாடியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பு பெரியார்நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் காண்டீபன் (வயது50). இவரது மனைவி முனியம்மாள்(48). இவர்களது மகன் கவி என்ற மணிபாலன். முனியம்மாள் புதுவை பஸ் நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்தநிலையில் மணி பாலனுக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனுக்கும் ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டு தகராறு இருந்து வந்தது. இதில் ஆத்திரம் தீராத மணிகண்டன் மணிபாலனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இரும்பு கம்பியால் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார். இதனை தடுக்க முயன்ற முனியம்மாளையும் கம்பியால் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து முனியம்மாள் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×