search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.
    X
    கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகம்

    ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி குட்டைகுளம் மேல்கரையில் அமைந்து அருள் பாலித்துவரும் ஸ்ரீ ஆதிபராசக்தி அன்னை திருக்கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடத்துவதென சக்தி பீட ஆன்மிக இயக்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 26ந் தேதி முதல் வேள்வி பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக இரண்டாம் கால வேள்வி பூஜை மற்றும் மூன்றாம் கால வேள்விபூஜை சிறப்பாக நடைபெற்ற நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான இன்று  மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, சிவ வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அறந்தாங்கி சுற்றுவட்டார பொதுமக்கள், ஆதிபராசக்தி மன்றத்தினர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு ஆதிபராசக்தி அன்னையை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 100ற்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×