என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    குருபரப்பள்ளி அருகே 3 மாடுகள் திருட்டு

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே 3 மாடுகளை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே கங்கசத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 53), விவசாயி.

    இந்த நிலையில் கடந்த 25ந் தேதி இவர் வீடு அருகே கட்டியிருந்த 3 மாடுகளை காணவில்லை. யாரோ மர்ம நபர், மாடுகளை திருடி சென்றது தெரிய வில்லை. இதன் மதிப்பு ரூ.65 ஆயிரம் ஆகும்.

    இதுபற்றி கோவிந்தன், குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×