என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே மத்தூரம்மா கோவில் தேரை இழுத்து வரும் காளைகள்.
    X
    ஓசூர் அருகே மத்தூரம்மா கோவில் தேரை இழுத்து வரும் காளைகள்.

    2 ஆயிரம் காளைகள் இழுத்து வந்த மத்தூரம்மா கோவில் பிரமாண்ட தேர்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்தூரம்மா கோவில் தேரை 2 ஆயிரம் காளைகள் இழுத்து வந்தன.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஒஸ்கூர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை ராஜேந்திர சோழன் கட்டியதாக கூறப்படுகிறது.

    இக்கோவிலை திப்புசுல்தான், மைசூர் அரச வம்சத்தினரும் பராமரித்துள்ளனர். மாரியம்மனை இக்கிராம மக்கள், மத்தூரம்மா என்று வழிபடுகின்றனர். மத்தூரம்மா ஒஸ்கூருக்கு மட்டுமல்லாமல் சுற்றியுள்ள 48 கிராமங்களையும் காக்கும் தேவியாக அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவிலில் பங்குனி மாதம் தேர்த் திருவிழா நடை பெறும். விழாவில் ஒஸ்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தேர்கள் அலங்கரிக்கப்பட்டு அதில்  அந்தந்த கிராம தேவதைகள் மத்தூரம்மா தரிசனத்துக்காக எடுத்து வருவது வழக்கம். இதற்காக  ஒவ்வொரு கிராமத்தினரும் போட்டி போட்டு கொண்டு தேரை அமைத்து ஒஸ்கூருக்கு கொண்டு வருவார்கள்.

    இந்த ஆண்டு பங்குனி தேர்த் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. 12 கிராமங்களில் இருந்து பிரமாண்ட தேர்கள் செய்யப்பட்டு ஒஸ்கூருக்கு வந்தன. ஒரு தேருக்கு 200 மாடுகள் வீதம் 12 தேர் ரதத்தை 2000க்கும் மேற்பட்ட காளை மாடுகள் இழுத்து வந்தன. 

    சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் தேரோட்ட நிகழ்ச்சியில் காளைகள் மட்டுமே தேர்களை இழுத்து வந்தன. 

    தேர்களுக்கு பின்னால் பெண்கள், மாவிளக்குகளுடன் ஊர்வலமாக வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர்கள் முடிவில் கோவில் அருகே உள்ள பெரிய மைதானத்தை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபப்ட்டது.

    தேரோட்ட விழாவை முன்னிட்டு ஆனேக்கல்  பகுதியில் உள்ள ரெயில்வே பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. 

    தேரோட்ட விழாவில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வௌ¤நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×