என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஆரணி அருகே பாத்திர கடையில் செல்போன் திருட்டு
ஆரணி அருகே பாத்திர கடையில் செல்போன் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த மார்த்தா மற்றும் கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா ஆகியோர் கண்ணமங்கலம் பகுதியில் தனியார் நர்சிங் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் நேற்று காலையில் கண்ணமங்கலம் பஜார் வீதியில் உள்ள ஒரு பாத்திர கடையில் பொருட்கள் வாங்குவதற்கு சென்றுள்ளனர்.
அப்போது தங்களின் கையில் இருந்த செல்போனை அருகில் உள்ள டேபிளில் வைத்து விட்டு பொருட்களை எடுக்க சென்றுள்ளனர்.
இதனை நோட்டமிட்ட டிப்டாப் ஆசாமி பொருட்கள் வாங்குவது போல் நடித்து செல்போனை திருடி சென்றுள்ளார்.
பின்னர் செல்போன் காணாமல் போனது தெரிய வந்த நிலையில் மார்த்தா கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாத்திர கடையின் சிசிடிவி காட்சியை கொண்டு டிப்டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.
Next Story






