search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு முகாம்

    பெரம்பலூரில் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு முகாம் நடை பெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட  நில மோசடி தடுப்புசிறப்பு பிரிவு மற்றும் மாவட்ட வருவாய் துறையினர் இணைந்துபெரம் பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாமினை நடத்தியது.

    இதன்படி பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு தாசில்தார் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரஞ்சனா,தலைமை யிடத்து துணை தாசில்தார் சிலம்பரசன், எஸ்ஐ அபுபக்கர் ஆகியோர் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டது.

    முகாமில் மொத்தம் 25 மனுக்கள்  பெறப்பட்டு  18 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
    Next Story
    ×