search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெயிண்டிங் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

    கோபிசெட்டிபாளையம் அருகே பெயிண்டிங்தொழிலாளிதூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே  பெயிண்டிங்தொழிலாளிதூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (45). இவர் பெயிண்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

    இவரது மனைவி பூங்கொடி. மகேஸ்வரனுக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

    இந்த நிலையில் சம்பவத்தன்று மகேஸ்வரன் வீட்டின் அறையில் பேனில் லுங்கியால் தூக்கு போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×