என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா

    ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் வருகிற 16-ந் தேதி புஷ்ப பல்லக்கு உற்சவம் நடக்கிறது.
    வேலூர்:

    வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 41&வது ஆண்டு பிரம்மோற்சவ விழா வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 18&-ந்தேதி வரை 15 நாட்கள் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சிக்கு ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஸ்ரீபுரம் ஸ்ரீ சக்தி அம்மா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.  4-ந்தேதி மாலை 6 மணிக்கு  கிராம தேவதை ஸ்ரீ செல்லியம்மன் உற்சவமும், 5-ந்தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடக்கிறது. 

    முதல் நாளான 6-ந்தேதி காலை துவஜாரோகணம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு  அன்ன வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 7,8,9,10-ம் ஆகிய தேதிகளில் காலையில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சந்திர சேகரர்  புறப்பாடும், மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 

    11-ந்தேதி 63 நாயன்மார்கள் உற்சவமும், 12-ந்தேதி காலையில் பஞ்சமூர்த்திகள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலும் நடக்கிறது.

    13-ந்தேதி மாலை குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 14-&ந்தேதி காலையில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடும், புருஷா மிருக வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 

    15ந்தேதி காலையில் நடராஜருக்கு தீர்த்தவாரி அபிஷேகமும், மாலையில் அவரோகணம் கொடி இறக்கமும், ராவணேஸ்வரர் வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 

    16-ந்காலையில் பஞ்சப்ராகார உத்ஸவம் கோட்டையை சுற்றி சுவாமி வலம் வருதல், இரவு ஸ்ரீ சண்டிகேஸ்வரர் உற்சவம், ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கும் நடைபெறும். 17-ந் தேதி விடையாற்றி உற்சவம், 18-ந் தேதி உற்சவ சாந்தி அபிஷேகமும் நடக்கிறது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×