என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி வினியோகம்

    பள்ளிவாசல்களுக்கு ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி வினியோகத்திற்கு சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளனர்.
    சீர்காழி:

    ரமலான் நோன்பு வருகிற 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாக உள்ளது. இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் பகல் முழுவதும் உண்ணாமல் குடிக்காமல் பதிநான்கு மணிநேரம் நோன்பு எனும் விரதத்தை முப்பது தினங்கள் கடைபிடித்து வருகின்றனர்.
     
    நோன்பு விரதத்தை முடிக்கும் நேரமான இப்தார் நோன்பு திறக்க தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் பச்சரியில் தயாரிக்கப்படும் கஞ்சியை ஏழை பணக்காரர்கள் பாகுபாடுகள் இல்லாமல் அனைவரும் முக்கிய உணவாக அருந்துவார்கள்.

    இதன் அடிப்படையில் தமிக அரசு ஆண்டுதோறும் இஸ்லாமியர்களுக்கு தேவையான கஞ்சிக்கான அரிசியை பள்ளிவாசல் ஜமாஅத்துகளுக்கு, அப்பகுதியில் வசிக்கும் ஜமாஅத் மக்கள் தொகைக்கு ஏற்ப வினியோகித்து வருகிறது.

    இவ்வாண்டும் 6ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை தமிழக அரசின் சார்பாக வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தவிட்டுள்ளார்கள். கடந்த ஆண்டை விட கூடுதலாக ஒதுக்கீடுகள்செய்து உரிய நேரத்தில் விரைவாக கிடைத்திட வழி வகை செய்து ஆணைபிரப்பித்துள்ள தமிழக முதல்வருக்கும், உரிய ஆவணங்களை சமர்பித்து உடன் பெற்று செல்ல அறிவுறுத்தியுள்ள மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவுக்கும், சீர்காழி வட்டார சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக நன்றியை தெரிவித்து அதன் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×