என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இலங்கை சிறையிலுள்ள 16 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்26 March 2022 6:16 AM GMT (Updated: 26 March 2022 6:16 AM GMT)
மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய மாநில அரசுகள் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் இன்று ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்:
ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடந்த புதன்கிழமை காலையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 12 பேரையும், மண்டபம் மீனவர்கள் 4 பேரையும் சேர்த்து 16 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து அவர்கள் சென்ற 2 படகுகள் சிறை பிடித்தது.
இதனை கண்டித்து ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் கடந்த வியாழக் கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். மேலும் மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய மாநில அரசுகள் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் இன்று ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர் சங்க தலைவர் சேசு ராஜா தலைமை வகித்தார். அனைத்து மீனவ சங்கத்தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இலங்கை சிறையிலுள்ள 16 மீனவர்களையும் சிறைபிடிக்கப்பட்ட 2 படகுகளை விடுவிக்கக்கோரி கோஷ மிட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட் டத்தில் மகளிர் மீனவர் கூட்டமைப்பு மற்றும் 16 மீனவர்களின் குடும்பத்தினர் உள்பட 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X