என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.
காட்பாடியில் விலை உயர்ந்த பைக்குகளை திருடிய சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
காட்பாடியில் விலை உயர்ந்த பைக்குகளை திருடிய சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
காட்பாடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக விலை உயர்ந்த பைக்குகளை கும்பல் ஒன்று திருடி வந்தனர்.
காட்பாடி காந்திநகர், தனியார் பல்கலைக்கழக பகுதிகளில் நிறுத்தப்பட்ட விலை உயர்ந்த பைக்குகள் திருடு போனது. இதுகுறித்து புகாரின் பேரில் காட்பாடி மற்றும் விருதம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வேலூர் மாவட்ட எஸ்.பி.சிறப்புபடை சப்&இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் விருதம்பட்டு சில்க் மில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பைக்கில் வந்தனர். அவர்களை மடக்கி போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்குப்பின் பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில் ஒருவர் காட்பாடி வசந்தபுரம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (வயது 26) என்பதும் மற்ற 2 பேரும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக காட்பாடி பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தப்படும் விலை உயர்ந்த பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடி உள்ளனர்.
அந்த வாகனங்களை காட்பாடியில் உள்ள அவரது நண்பர் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர். இதை அறிந்த போலீசார் பதுக்கி வைத்திருந்த 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
மணிவண்ணன் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறுவர்கள் இருவரும் வேலூர் ஜெயில் அருகே உள்ள பாஸ்டல் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் கொள்ளை கற்பழிப்பு, செயின் பறிப்பு, வாகன திருட்டு ஆகியவற்றில் சிறார்கள் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






