என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திருவலம் அருகே பெண்ணை தாக்கி 5 பவுன் செயின் பறித்த கொள்ளையன் கைது
திருவலம் அருகே பெண்ணை தாக்கி 5 பவுன் செயின் பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள கம்பராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி.
இவரது மனைவி வசந்தா (வயது 55), கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன் தினம் அங்குள்ள நிலத்திற்கு தனியாக நடந்து சென்றார்.
அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் வசந்தாவை மிரட்டி, கழுத்தில் அணிந்திருந்த செயினை கழற்றி தருமாறு மிரட்டினார்,
அதற்கு வசந்தா மறுத் துள்ளார். உடனே அந்த நபர் வசந்தாவை தாக்கி செயினை பறித்து செல்ல முயன்றார். அப்போது வசந்தா செயினை பிடித்து கொண்ட தால் செயினின் ஒருபகுதி (5 பவுன்) மர்மநபர் கையில் சிக்கி உள்ளது. அந்த நகையு டன் மர்ம நபர் தப்பி ஓடினார்.
இதனால் வசந்தா கூச் சல் போட்டார். இதனையடுத்து அப்பகுதி யில் வேலை செய்து கொண் டிருந்தவர்கள், செயின் பறித்து சென்ற நபரை பிடித்து, திருவ லம் போலீசில் ஒப்படைத்த னர்.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கலவை அருகே உள்ள சென்னசமுத் திரம் பகுதியை சேர்ந்த பாபு (42) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






