என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம சபை கூட்டம் நடந்த காட்சி.
    X
    கிராம சபை கூட்டம் நடந்த காட்சி.

    உலகம்பட்டு கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

    உலகம்பட்டு கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள உலகம்பட்டு கிராமத்தில் உலக தண்ணீர் தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    கிராம சபை கூட்டத்திற்கு உலகம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வேல்விழிஅறி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி ரேணுகோபால் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் மகாலட்சுமி பணி மேற்பார்வையாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
     
    இதில் சிறப்பு அழைப்பாள ராக திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளின் செயலர் அறவாழி கலந்து கொண்டு மத்திய அரசின் ஜல் ஜீவன்மிஷின் திட்டத்தின் அனைத்து கிராம பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் உலகம்பட்டு கிராமத்திள் 272 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு நபர் ஒன்றுக்கு நாளுக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் உலக தண்ணீர் தினத்தின் அவசியம் குறித்து பேசுகையில்:-

    நீரின்றி அமையாது உலகு ஆகையால் நீரின் அத்தியாவசியம் குறித்து பொதுமக்கள் அனைவரும் விழிப்போடு செயல்பட்டு குடி நீரை வீணாக்காமல் முறையாக பயன்படுத்தி குடிநீர் சிக்கனத்தை பின்பற்ற வேண்டும்.

    மேலும் குடிநீரை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று தண்ணீரின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விளக்கிப் பேசினார்.

    இதில் ஊர் பெரியவர்கள் பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.
    Next Story
    ×