என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    ஈரோட்டில் 420 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

    ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உட்பட 420 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உட்பட 420 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

    கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக் கைகளை எடுத்து வருகின்றனர். 

    ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழகத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 

    ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.  

    அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உட்பட 420 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

    இப்பணியில், 66 வாகனங்கள், 1,680 பணியா ளர்கள் ஈடுபடுகின்றனர். மேலும், 15 முதல், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் நாளை செலுத்தப்படும். 

    இந்த வாய்ப்புகளை, பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×