என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை சிப்காட் அருகே பாலத்தில் பைக் மோதி 2 பேர் பலி
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையை அடுத்த புதிய அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 41). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சென்னையை சேர்ந்தவர் கார்த்திக் (40) இவர் சென்னையில் நெட் சென்டர் நடத்தி வந்தார்.
ஆனந்தனும், கார்த்திக்கும் நண்பர்கள். இவர்கள் இருவரும் வேலை சம்பந்தமாக திருவலம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அக்ராவரம் பெல் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி மேம்பால தடுப்பு சுவரில் மோதியது.
இதில் 2 பேரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தன், கார்த்திக் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






