என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
வனப்பகுதியில் ஆட்டை வேட்டையாடியவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஆட்டை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காப்புக்காடு வனப்பகுதியில் சட்ட விரோதமாக வேட்டையில் மர்ம நபர்கள் ஈடுபடுவதாக வனத்துறை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனக்காவலர்கள் காட்டில் ரோந்து சென்றனர்.
அப்போது காப்பு காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த சாம்பசிவம் (வயது45), சண்முகம்(55) ஆகிய இருவரையும் வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் இருவரில் சண்முகம் கைது செய்யப்பட்ட நிலையில் சாம்பசிவம் தப்பி ஓடிவிட்டார். அவரை வனக்காவலர்கள் தேடி வருகின்றனர்.
ஆட்டை வேட்டையாட பயன்படுத்திய கம்பி சுருள் கத்தி போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். வனத் துறையினர் வேட்டையாடிக் கொன்ற ஆட்டையும் பறிமுதல் செய்தனர்.
Next Story






