என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காட்பாடி அருகே அடிப்படை வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

    காட்பாடி அருகே அடிப்படை வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் அருகே தேவ ரிஷி குப்பத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது.

    கடந்த 2017&ம் ஆண்டு பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டன. அந்த கட்டிடங்கள் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் 1 முதல் 6-ம் வகுப்பு வரை 150 மாணவ மாணவிகளும், 7 முதல் 10-ம் வகுப்பு வரை 120 மாணவ மாணவிகளும் ஒரே கட்டிடத்தில் படித்து வருகின்றனர். 

    பள்ளியில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததால் மாணவ மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது குறித்து அதிகாரி களுக்கு பலமுறை தகவல் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ள வில்லை என கூறப்படுகிறது.

    இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் குடியாத்தம் காட்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

    இதுகுறித்து தகவலறிந்த கே வி குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
    Next Story
    ×