என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டம் நடத்திய மாணவர்கள்.
ஆரணி விடுதியில் இருந்து வெளியே வரமறுத்து மாணவர்கள் போராட்டம்
ஆரணி அருகே விடுதியில் இருந்து வெளியே வரமறுத்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆண்கள் அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி அருகாமையில் பள்ளிக்கான விடுதி இயங்கி வருகிறது.
இந்த விடுதியில் வெளியூரிலிருந்து வந்த 88 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கி படித்து வரும் 9,10,11,12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் திருவண்ணாமலை சமூக நலத்துறைக்கு இணையதளம் மூலம் புகார் அளித்தனர்
மாணவர்களை ஓரின சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தியதாக விடுதி துணை காப்பாளர், ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் எதிரொலியாக விடுதியில் உள்ள மாணவர்களின் நலன் கருதி திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்பு துறை அதிகாரி செல்வி மற்றும் அதிகாரிகள் மாணவர்களை மாற்று விடுதிக்கு அழைத்து செல்ல முயன்றனர்.
மேலும் இந்த விடுதியில் உள்ள மாணவர்கள் மாற்று விடுதிக்கு செல்ல மாட்டோம் என்று ஆரணி தேவிகாபுரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வந்த சேத்துப்பட்டு போலீசார் மாணவர்களிடம் சமரசம் பேச்சில் ஈடுபட்டு மாணவர்களை விடுதியில் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.
பேச்சுவார்த்தை தோல் வியடைந்தை யொடுத்து மாணவர்கள் விடுதியில் சுமார் 7 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் சமூக பாதுகாப்பு துறை மற்றும் வருவாய் துறை காவல்துறை ஆகியோர் பேச்சுவார்த்தையில் 88மாணவர்களில் 25 மாணவர்கள் மட்டுமே திருவண்ணாமலை விடுதிக்கு செல்ல சம்மதம் தெரிவித்து வேன் மூலம் திருவண்ணாமலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மற்ற மாணவர்கள் அங்கேயே தங்க வைக்கபட்டுள்ளனர்.
இதனால் மாணவர்களின் 7 மணி நேரம் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Next Story






