என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    போளூரில் மனுநீதிநாள் முகாம்

    போளூரில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
    போளூர்;

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா இரண்டே பட்டு கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு தாசில்தார் சண்முகம் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர், மண்டல துணை தாசில்தார் சிவலிங்கம் வரவேற்றார். 

    சிறப்பு அழைப்பாளராக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி கீதாலட்சுமி கலந்து கொண்டார்.

    இந்த மனு நீதி நாள் முகாமில் 14 பேருக்கு முதியோர் உதவித் தொகையும், 7 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையும், பட்டா மாறுதல் விவசாயி ஒருவருக்கும், மருந்து அடிக்கும் கருவி ஒருவருக்கும் என மொத்தம் 720 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதில் ஆதிதிராவிடர் நல தாசில்தார் வெங்கடேசன், தாலுக்கா விநியோக அதிகாரி மஞ்சுளா, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பத்மஜோதி ராஜசேகர், வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    முடிவில் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் நன்றி கூறினார்.
    Next Story
    ×