என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் லலிதா பங்கேற்றார்.
    X
    சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் லலிதா பங்கேற்றார்.

    சிறப்பு கிராமசபை கூட்டம்

    மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில், கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முதலிடத்தில் உள்ள தரங்கம்பாடி தாலுக்கா, மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் தேவி சுரேஷ்குமார் தலைமை தாங்கினர். துணைத் தலைவர் ராஜகோபால் வரவேற்றார்.

    மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மாவட்டத்திலேயே இந்த ஊராட்சிதான் முதலிடத்தில் உள்ளது. வீடுகளுக்கும், தெரு பம்பினிலும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
     
    அதேசமயம் குடிநீரின் அவசியம், அதனை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வும் ஊராட்சி சார்பில் வழங்கப் பட்டுள்ளதை பாராட்டி இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் லலிதா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    சுகாதாரமான குடிநீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    ஊராட்சியின் நீர் மேலாண்மை குழு உறுப்பினர்கள் பொது மக்களுக்கு நிலத்தடி நீர் அறிந்தும் அறியாததும் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

    அதில் ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள நில நீர் தரப்பரிசோதனை பெட்டியின் மூலம் சுகாதாரமான குடிநீர், குடிநீரின் தன்மை, மணம், கலங்கல், பி.எச், காரத்தன்மை, குளோரைடு, இரும்பு, உப்பு உள்ளிட்ட 16 வகையாண பரிசோதனைகள் எவ்வாறு செய்வது என்பதை செய்து காண்பித்தனர்.

    திட்ட இயக்குனர் முருகண்ணன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, குடிநீர் வழங்கள் நிர்வாக பொறியாளர் ராஜு, உதவி நிர்வாக பொறியாளர்கள் ஜெயக்குமார், விஜயராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மைவிழி, ஒன்றிய பொறியாளர் முத்துக்குமார், கீழப்பெரும்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியசாமி, வீரமணி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சக்திவேல் நன்றி கூறினார்.
    Next Story
    ×