என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுர ஆதீனம் பேட்டி
    X
    தருமபுர ஆதீனம் பேட்டி

    அமிர்தகடேஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் புகழ் பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகவும், சமயக்குரவர்களால் பாடல் பெற்றதும், அபிராமிப் பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமி ஆக்கி அபிராமி அம்பாள் திருவிளையாடல் புரிந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 27ம் தேதி காலை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பிரம்மாண்டமான முறையில் யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    யாகசாலை ஏற்பாடுகள் குறித்து தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பார்வையிட்டார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுர ஆதீன மடாதிபதி கூறுகையில் 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது என்றும், சுவாமி அம்பாள் காலசம்ஹாரமூர்த்தி ஆகியோருக்கு, நவாக்கினி ஹோமமும், முருகன் விநாயகர் உள்ளிட்டோருக்கு பஞ்சாக்னி ஹோமம், மற்ற பரிவார தெய்வங்களுக்கு ஏகாக்கினி ஹோமமும், நடைபெறும்,

    120 வேத விற்பன்னர்கள் யாகம் நடத்துவார்கள் என்றும், இருபத்தி ஏழு திருமுறை ஓதுவார்கள் தேவாரம், திருப்பதிகம் பாடுவார்கள் என்றும், ஒரு லட்சம் மிருத்யுஞ்சய ஜபம் செய்யப்படும் என்றும், 100 பேர் அபிராமி அந்தாதி பாடுவார்கள் என்றும், பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தருமபுர ஆதீன மடாதிபதி அப்போது தெரிவித்தார்.
    Next Story
    ×