என் மலர்
உள்ளூர் செய்திகள்

100 நாள் வேலை திட்ட பணியில் பெண்கள் ஈடுபட்ட காட்சி.
100 நாள் வேலை திட்ட பணி தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகோஜனஹள்ளி பேராட்சியில் 100 நாள் வேலை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாகோஜனஹள்ளி, ஊத்தங்கரை, பர்கூர், கெல மங்கலம், காவேரிப்பட்டிணம், தேன்கனிக்கோட்டை ஆகிய 6 பேரூராட்சிகள் உள்ளது.
ஊராட்சிகளில் செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், இதுநாள் வரை பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவுபடி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாகோஜனஹள்ளி பேரூராட்சியில் மட்டும் இந்த திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
நாகோஜனஹள்ளி பேரூராட்சியில் இத்திட்டம் 1942 பயனாளிகள் தேர்வு செய்யப் பட்டு, 1375 பயனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது. அந்த வகையில் தட்டக்கல் கிராமத்தில் கவுண்டன்குட்டை ஏரியிலிருந்து செல்லும் உபரிநீர் கால்வாயில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பூஜை போட்டு வேலையை துவங்கினர்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், பேரூராட்சியில் இருக்கும் எங்களுக்கு இதுநாள் வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருந்தது. தற்போது இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்தனர்.
Next Story






