என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலையரசன்
வேலூரில் தனியார் நிறுவன ஊழியர் உடல் உறுப்புகள் தானம்
வேலூரில் விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டதால் தனியார் நிறுவன ஊழியர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள செம்பேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கலையரசன் (வயது 31). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 18-ந்தேதி காட்பாடி கசத்தை அடுத்த உள்ளிபுதூர் கூட்ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டது.
பலத்த காயமடைந்த அவரை சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று கலையரசனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இவரது உறவினர்கள் கலையரசனின் உடலுறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
அவரது இருதயத்தின் வால்வுகள் போர்டிஸ் லைப் லைன் மருத்துவமனைக்கும், கல்லீரல் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் மற்றும் கண் ஆகியவை மற்ற மருத்துவமனைகளுக்கு தானமாக பெறப்பட்டது.
Next Story






