என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
வயிற்று வலியால் 10ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அருகே வயிற்று வலியால் 10ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர், மார்ச்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அடுத்துள்ள ஏ.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தவமணி. இவரது மகள் மோகனா (வயது15). இவர் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மோகனா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






