என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிடிபட்ட பாம்பு
குடியாத்தத்தில் வீட்டின் அருகே பதுங்கியிருந்த 6 அடி நீள நாகப்பாம்பு
குடியாத்தத்தில் வீட்டின் அருகே பதுங்கியிருந்த 6 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் ராஜகணபதி நகர் அருகே உள்ள திருமண மண்டபம் பின்புறம் நேற்று மாலையில் ஒரு வீட்டின் அருகே சத்தம் கேட்டுள்ளது.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தபோது சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 6 அடி நீளம் உள்ள நாகப்பாம்பை பிடித்தனர்.
பிடிபட்ட நாகப்பாம்பை தீயணைப்புத்துறையினர் குடியாத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Next Story






