என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருசக்கர வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்களை காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி எஸ்.பி.
    X
    இருசக்கர வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்களை காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி எஸ்.பி.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் விபத்து மரணங்கள் குறைக்கப்பட்டுள்ளது- எஸ்.பி.பவன்குமார் தகவல்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் விபத்து மரணங்கள் குறைக்கப்பட்டுள்ளது என போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கத்திலும், சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை குறைக்கும் வகையிலும் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    அதன் ஒரு பகுதியாக திருவண்ணா மலை சந்திப்பு பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமையிலும்,திருவண்ணாமலை உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி மற்றும் காவல்துறை அதிகாரிகள், தியாகி அண்ணாமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தலை கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் முகம் பார்க்கும் கண்ணாடியை காட்டியும், முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறியும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தியபடியும் ,முக கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் நேரடியாக இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

    அவர் பேசும்போது கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில் நடப்பாண்டில் மட்டும் இதுவரை தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்கியவர்கள் மீது 2 லட்சத்து 8 ஆயிரத்து  285 வழக்குகளும், 

    மது அருந்திவிட்டு வாகனத்தை ஏற்றுதல், செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்குதல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், 

    அதிக பாரம் ஏற்றுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுதல், சிக்னல்களை மீறுபவர்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தல் தொடர்பாக 18 ஆயிரத்து 822 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு 20.3.2021 வரை 133 பேர் விபத்தில் மரணமடைந்துள்ளனர்.நடப்பாண்டு 27.2 சதவீதம் விபத்து குறைந்து 95 பேர் விபத்தில் மரணமடைந்துள்ளனர். 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.

     இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×