என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை படத்தில் காணலாம்.
இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பாதை மறுத்ததால் மறியல்
இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பாதை மறுத்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மணவிடுதி கூழியான் விடுதி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி சரஸ்வதி (வயது 77). இவர் உடல் நலக்குறைவால் நேற்று இறந்து விட்டார் .
இவரது உடலை சுடுகாட் டுக்கு கொண்டு செல்வதற்கு அதே ஊரை சேர்ந்த சுப்பையா மகன் ரத்தினகுமார் தனது பட்டா நிலத்தில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல் வதற்கு பாதை அனுமதி இல்லை என்று கூறி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இறந்தவரின் உடலை பட்டா இடத்தில் கொண்டு செல்ல பாதை மறுப்பததால் உடலை வீட் டில் வைத்து விட்டு இறந் தவரின் உற்றார், உறவினர் கள் தஞ்சாவூர் புதுக் கோட்டை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் தகவல றிந்து சம்பட்டிவிடுதி போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர்.
பின்னர் தற்போது இறந் தவரின் உடலை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் இனி வரும் காலங்களில் பாதையை சரிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று போலீசார் கூறியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட் டது. அதனை தொடர்ந்து இறந்தவரின் உடலை எடுத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மணவிடுதி கூழியான் விடுதி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி சரஸ்வதி (வயது 77). இவர் உடல் நலக்குறைவால் நேற்று இறந்து விட்டார் .
இவரது உடலை சுடுகாட் டுக்கு கொண்டு செல்வதற்கு அதே ஊரை சேர்ந்த சுப்பையா மகன் ரத்தினகுமார் தனது பட்டா நிலத்தில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல் வதற்கு பாதை அனுமதி இல்லை என்று கூறி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இறந்தவரின் உடலை பட்டா இடத்தில் கொண்டு செல்ல பாதை மறுப்பததால் உடலை வீட் டில் வைத்து விட்டு இறந் தவரின் உற்றார், உறவினர் கள் தஞ்சாவூர் புதுக் கோட்டை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் தகவல றிந்து சம்பட்டிவிடுதி போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர்.
பின்னர் தற்போது இறந் தவரின் உடலை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் இனி வரும் காலங்களில் பாதையை சரிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று போலீசார் கூறியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட் டது. அதனை தொடர்ந்து இறந்தவரின் உடலை எடுத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியது.
Next Story






