என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் ஆயுதப் படை போலீசாருக்கு கட்டாய பணியிட மாற்றம்

    வேலூர் ஆயுதப் படை போலீசார் கட்டாய பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

    இதனால் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங் களில் போலீசார் பற்றாக்குறை ஏற்பட்டது.இதன் காரணமாக தற்போது வேலூர் ஆயுதப் படையில் பணியாற்றி வரும் கிரேட் 1 போலீசார் மற்றும் அவில்தார்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

    இதனால் ஆயுதப் படையில் பணியாற்றி வரும் போலீசார் தங்களது குழந்தை குடும்பத்தினரை பிரிந்து தினமும் 70 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று வர வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

    இதனால் பெண் போலீசார் மிகுந்த மனவேதனை அடைந்து உள்ளனர்.

    கட்டாயத்தின் பேரில் பெண் போலீசாரை திருப்பத்தூருக்கு பணி இடமாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×