என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
    X
    மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

    ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

    கீராநல்லூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி தாலுகா கீராநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்ணைக்குழுக் கூட்டம் மற்றும் பெற்றோர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜெ.மேகலா தலைமை வகித்தார்.ச.அமுதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளி முன்னேற்றம், வளர்ச்சி எதிர்காலத்தேவைகள், திட்டங்கள், மாணவர்கள் நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பள்ளிவளர்ச்சிகள் குறித்து பள்ளி ஆசிரியர்கள் பத்மாவதி, சுமதி ஆகியோர் எடுத்துக் கூறினார்கள். தன்னார்வலர்கள் ஸ்ரீதேவி, வாஹிதாபானு கலந்து எஸ்.எம்.சி. உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றி பேசினார்கள். பிரியா பள்ளியின் சிறப்புகள் பற்றி காணொளி மூலம் விளக்கினார். கூட்டத்தில் பெற்றோர்கள், உறுப்பினர்கள் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×