என் மலர்
உள்ளூர் செய்திகள்

எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
செங்கத்தில் 8 வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் போராட்டம்
செங்கத்தில் 8 வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம்:
சென்னை &சேலம் எட்டு வழி சாலை திட்டம் ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என 8 வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் செங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் எட்டு வழிச்சாலை ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்ததாகவும் ஆனால் தற்போது அமைச்சர் மற்றும் எம்.பி உள்ளிட்டோர் யாருக்கும் தீர்வு ஏற்படாத வண்ணம் முதல்வரின் ஆலோசனைப்படி எட்டு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என கூறிவருகின்றனர்.
இது விவசாயிகளிடையே மனவேதனையும், குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக 8 வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 8 வழி சாலை திட்டத்தை ரத்து செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரி 8 வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் செங்கம் அருகே உள்ள பெரும்பட்டம் கிராமத்தில் பசமாடுகளுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Next Story






