என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஒருபோதும் செயல்படுத்தப்பட மாட்டாது- அமைச்சர் தகவல்
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஒருபோதும் செயல்படுத்தப்பட மாட்டாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற வரும் முன் காப்போம் இலவச மருத்துவ முகாமை மாநில சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது :
புற்றுநோய் போன்ற அதிக பாதிப்புள்ள நோய்களை இதுபோன்ற முகாம்களின் மூலம் கண்டறிந்து சிகிச்சை அளித்து குணப்படுத்தி விடலாம். மேலும் தமிழகத் தில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த அனைவருக்கும் உயர் தரத் திலான சிகிச்சை பெறு வதற்காக மக்களைத் தேடி மருத்துவ முகாம், இன்னுயிர் காப்போம் திட்டம் போன்ற சிறப்பு மருத்துவ திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஒருபோதும் செயல்படுத்தப்பட மாட்டாது. அதற்கு உறுதியான நடவடிக்கையை தமிழக முதல்வர் எடுத்து விட்டார் என்பதால் மக்கள் அச்ச மின்றி இருக்லாம். ஒவ் வொரு குடும்பத்திலும் செல்போன் இருப்பதைப் போன்று அறிவுசார் விளையாட்டுக்குரிய செஸ் பலகையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். செஸ் விளையாட்டின் மூலம் மாணவர்களின் புத்திக் கூர்மை அதிகரிக்கிறது.
இந்தியாவிலேயே இது வரை நடந்திராத செஸ் ஒலிம் பியாட் போட்டி, தமிழகத்தில் நடைபெற உள்ளது. 200 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கக்கூடிய இந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்பை தமிழக முதல்வர் ஏற்படுத்திக் கொடுத்திருப் பதை விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற அடிப்படை யில் பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சுகாதார துணை இயக்குநர் கலை வாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






