என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
Byமாலை மலர்20 March 2022 10:20 AM GMT (Updated: 20 March 2022 10:20 AM GMT)
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் சலவன் பேட்டையைச் சேர்ந்தவர் மணி (வயது 31). இவர் ஒரு விதவை பெண்ணை 2- வதாக திருமணம் செய்து கொண்டார்.
அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே 15 வயதில் மகள் ஒருவர் உள்ளார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் மணி சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். ஆனால் தாயார் இதனை பற்றி கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.
இது குறித்து சிறுமி உறவினர்களிடம் நடந்த சம்பவங்களை எடுத்துக்கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் மணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மணியையும் மற்றும் சிறுமியின் தாயாரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X