search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற எஸ்.பி அணி
    X
    கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற எஸ்.பி அணி

    வேலூர் நேதாஜி மைதானத்தில் கலெக்டர், எஸ்.பி. அணிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி

    வேலூர் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற கலெக்டர், எஸ்.பி. அணிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டியில் 19 ரன் வித்தியாசத்தில் எஸ்.பி. அணி வெற்றி பெற்றது.
    வேலூர்:

    வேலூர் நேதாஜி மைதானத்தில் கலெக்டர், எஸ்.பி, அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி இன்று காலை நடந்தது. கலெக்டர் அணிக்கு கேப்டனாக கலெக்டர் குமாரவேல் பாண்டியனும் எஸ்பி அணிக்கு எஸ்பி ராஜேஷ் கண்ணனும் கேப்டனாக இருந்தனர். 

    15 ஓவர் கொண்ட இந்த போட்டியில் எஸ்.பி அணியில் 11 பேரும், கலெக்டர் அணியில் 11 பேரும் களமிறங்கினர்.

    டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய எஸ்.பி அணி 15 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. 

    இந்த அணியில் அதிகபட்சமாக சப்&இன்ஸ்பெக்டர் முத்தரசு 11 பந்துகளில் 2 சிக்சர் உட்பட 17 ரன்களை விளாசினார். 

    எஸ்.பி ராஜேஷ் கண்ணன் 22 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். கலெக்டர் அணியில் சுபாஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கலெக்டர் அணி 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை மட்டுமே எடுத்தது. 19 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்பி அணி வெற்றி பெற்றது. 

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் 9 ரன்களும், சுபாஷ் என்பவர் 28 ரன்களும் எடுத்தனர். எஸ்.பி அணியில் சதீஷ், முத்தரசு, சதீஷ்குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எஸ்.பி. அணிக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார். கடந்த 1995&ம் ஆண்டு இதேபோல் கலெக்டர், எஸ்.பி. அணிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. அதில் எஸ்.பி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×