என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் உள்ள மிகப்பழமை வாய்ந்த கவி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 9&ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி தினமும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேர் திருவிழா நேற்று நடைபெற்றது . அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி உற்சவ மூர்த்திகளை தேரில் அமர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தேன்கனிக் கோட்டை பேருராட்சி தலைவர் சீனிவாசன் வடம்பிடித்து தேர் திருவிழா துவக்கி வைத்தார். தொடர்ந்து வேதமந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
தேர் கோவிலை சுற்றி வலம் வந்து மாலை நிலை நிறுத்தப்பட்டது விழாவில் தேன் கனிக் கோட்டை, கெலமங்கலம், அஞ்செட்டி, தளி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு நீர்மோர் , பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்
Next Story






