என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    காவேரிப்பட்டணத்தில் நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்று பாலத்தின் மீது நேற்று நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    காவேரிப்பட்டணம்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்று பாலத்தின் மீது நேற்று நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ஜே.பி கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில துணை அமைப்பாளர் கோனப்பன், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மாரியப்பன், தருமபுரி மாவட்ட தலைவர் முனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட பொது செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில அமைப்பாளர் பழனிவேல் தொடங்கி வைத்தார். 

    தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும்,  கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க கோரியும்  பிளாஸ்டிக்கை தடுக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். முடிவில் தருமபுரி மாவட்ட பொது செயலாளர்  முனியப்பன் நன்றி கூறினார்.
    Next Story
    ×