என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய கார்
திருவண்ணாமலை அருகே பைக் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி
திருவண்ணாமலை அருகே பைக் மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா கீழ்பென்னாத்தூரை அடுத்த வெளுங்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 26), சொர கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (37) இவர்கள் இருவரும் தங்கள் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி செடிக்கு பூச்சிக்கொல்லி மருந்து வாங்குவதற்காக நேற்று மதியம் ஒரே பைக்கில் கீழ்பென்னாத்தூருக்கு சென்றனர்.
அங்கு பூச்சிக் கொல்லி மருந்து வாங்கி கொண்டு மீண்டும் பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அரசம்பட்டு அரச மரம் அருகில் வந்த போது எதிரில் திருவண்ணாமலையில் இருந்து வேகமாக வந்த ஒரு கார், பைக் மீது மோதியது.இதில் தினேஷ், முத்துக்குமார் ஆகியோர் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற கடம்பை கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் உஸ்மான் என்பவரை தேடி வருகின்றனர்.
Next Story






