என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரியில் வாலிபரிடம் ரூ.7.50 லட்சம் மோசடி

    கிருஷ்ணகிரியில் வாலிபரிடம் ரூ.7.50 லட்சம் மோசடிசெய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள காமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவானந்தசுந்தரம் (வயது28). ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இவருக்கு கடந்த வரும் 13.7.2021 அன்று ஒரு போன் வந்தது. அதில் நீங்கள் ஒரு கம்பெனியில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறினர். இதனை நம்பி சிவானந்தசுந்தரம் தனது வங்கி கணக்கின் விபரம் தெரிவிக்கவே அதில் இருந்து ரூ.7 லட்சத்து 62 ஆயிரத்தை எடுத்துள்ளனர்.

    இது குறித்து அவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்ததார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சிவானந்தசுந்தரம் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடிய மணிகண்டன், கார்த்திக் ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் இருவர் மீது வழக்குபதிவு செய்தனர்.
    Next Story
    ×