search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    செய்யாறு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது

    செய்யாறு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    செய்யாறு:

    செய்யாறு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 33). டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
     
    இதனால் அந்த மாணவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    டாக்டர் பரிசோதனை செய்தபோது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. 

    இதுகுறித்து அவரது தாயார் செய்யார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முருகனை போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    முருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×