என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    செய்யாறு அருகே கத்தியை காட்டி பைக் திருட முயன்ற வேலூரை சேர்ந்த 2 பேர் கைது

    செய்யாறு அருகே கத்தியை காட்டி பைக் திருட முயன்ற வேலூரை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள சுண்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கருணா (வயது 39),  எலக்ட்சியன். 

    இவர் நேற்று காலை பொருட்களை வாங்குவதற்காக செய் யாருக்கு தனது பைக்கில் வந்தார். அப்பொது அருகாவுரில் வண்டியை நிறுத்திவிட்டு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். 

    பின்னால் பெயர் பலகை இல்லாத பைக்கில் வந்த 2 பேர் இறங்கி எலக்ட்ரீசியன் ஓட்டிவந்த பைக்கை திருட முயற்சி செய்தனர். 

    கருணா ஏன் என் பைக்கை எடுக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள் 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி வண்டியை தள்ள முயற்சி செய்தபோது அங்கிருந்தவர்கள் உதவியுடன் 2 பேரையும் பிடித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

    போலீஸ் விசாரணையில் அவர்கள் இருவரும் வேலூர் கொசப்பேட்டை சேர்ந்த ஷகில் (34), வேலூர் வேலப்பாடி சேர்ந்த சுந்தர் (38) என்பது தெரியவந்தது/

    கருணா கொடுத்த புகாரின் மீது இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து  அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி   வருகின்றனர்.
    Next Story
    ×