என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி நெடுங்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டம் மற்றும் அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டாமல் கட்டியதாகவும். ஏழைகளுக்கு இலவச கழிப்பறைகள் கட்டாமல் பெரும் ஊழல் செய்த அரசு அதிகாரிகள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரி
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெடுங்குடி கிளை செயலாளர் சுசி.கணேசன் தலைமை வகித்தார்.
வி.தொ.ச. மாநில பொருளாளர் எஸ்.சங்கர் கண்டனவுரை யாற்றினார். வி.தொ.ச மாவட்ட பொருளாளர் க.சண்முகம். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சண்முகம். சி.பி.ஐ.எம் அரிமளம் ஒன்றிய செயலாளர் ராமையா, மாவட்ட நிர்வாகிகள் ஜோஷி, செந்தமிழ் செல்வன், அடைக்கன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் அடைக்கப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு விளக்க வுரையாற்றினார். முடிவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
Next Story






