search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    பைக் மரத்தில் மோதி அரசு ஊழியர் பலி

    சாலை விபத்தில் அரசு ஊழியர் பலியானார்.
    திருச்சி:

    தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் கோடங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 42. இவர் திருச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார். 

    நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து விட்டு முசிறியில் இருந்து கோனேரிப்பட்டி கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். 

    அப்போது தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் செல்லும் மெயின் ரோட்டில் எதிர்பாராதவிதமாக சாலையோரமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சுப்பிரமணியன் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். 

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சுப்பிரமணியன் இறந்தார்.  

    இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×