என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எலி மருந்து தின்று பெண் தற்கொலை
Byமாலை மலர்18 March 2022 9:22 AM GMT (Updated: 18 March 2022 9:22 AM GMT)
எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் உத்திரவாகினிபேட் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பானுப்பிரியா. (வயது 30) இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பானுப்பிரியாவிற்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படும்.
அதுபோல் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சமையல் செய்யும் போது பானுப்பிரியாவிற்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் அடுப்பில் விழுந்ததில் அவருக்கு உடலில் பெரிய அளவில் தீக்காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் முற்றிலும் குணமடைந்தார்.
இதற்கிடையே கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பானுப்பிரியா திருபுவனை பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை செய்து வந்தார். அவ்வப்போது மனைவியை சுந்தர் பார்த்து விட்டு செலவுக்கு பணம் கொடுத்து வருவார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பானுப்பிரியாவிற்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பானுப்பிரியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலி மருந்தை தின்றார்.
பின்னர் பானுப்பிரியா குச்சிப்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு பானுப்பிரியாவிற்கு உடல்நிலை பாதிக்கப்படவே பெற்றோர் விசாரித்தனர். அப்போது பானுப்பிரியா எலிமருந்து தின்று தற்கொலைக்கு முயன்றதை தெரிவித்தார். உடனே அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பானுப்பிரியா பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து அவரது கணவர் சுந்தர் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X